வி.எஸ்.ஆர். பள்ளியில் சரஸ்வதி பூஜை

திசையன்விளை வி.எஸ்.ஆர். பள்ளியில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது.
வி.எஸ்.ஆர். பள்ளியில் சரஸ்வதி பூஜை
Published on

திசையன்விளை:

திசையன்விளை வி.எஸ்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் முன்னிலை வகித்தார். இயக்குனர் சவுமியா ஜெகதீஸ் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் பள்ளி முதல்வர் அன்னதங்கம் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் கலந்துகொண்டனர். சரஸ்வதி பூஜை அன்று பள்ளியில் அதிக அளவில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. பூஜையில் கலந்துகொண்ட மாணவர்களின் விரலை பிடித்து நெல்மணியில் எழுத ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்தனர். இதில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com