ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1200 கனஅடியாக குறைந்தது

கோப்புப்படம்
நேற்று ஒகேனக்கல்லுக்கு 1500 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று குறைந்துள்ளது.
தர்மபுரி,
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. மேலும் கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், தமிழக எல்லையோர காவிரி ஆற்று பகுதிகளிலும் பெய்த மழையின் அளவு குறைந்தது.
இதனால் தமிழக கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு 1500 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 1200 கன அடியாக குறைந்தது.
இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீரின் வேகம் குறைந்தது. மேலும் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டும் காவிரி ஆற்றின் அழகையும் ரசித்தனர்.






