ஏரிகளில் போதிய அளவு நீர் உள்ளது; சென்னையில் குடிநீர் பஞ்சம் வராது - அமைச்சர் கே.என்.நேரு

சென்னையில் குடிநீருக்கு பஞ்சம் ஏற்படாது என்றும், அனைத்து ஏரிகளிலும் போதிய அளவு நீர் உள்ளதாகவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
ஏரிகளில் போதிய அளவு நீர் உள்ளது; சென்னையில் குடிநீர் பஞ்சம் வராது - அமைச்சர் கே.என்.நேரு
Published on

சென்னை,

சென்னை பெரம்பூர் காமராஜர் நகரில் 2 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகர்ப்புற சுகாதார நிலையத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு ஒழிப்பிற்காக மாநகராட்சி சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் குடிநீருக்கு பஞ்சம் ஏற்படாது என்றும், அனைத்து ஏரிகளிலும் போதிய அளவு நீர் உள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com