நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீட்டிப்பு

நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீட்டிப்பு
Published on

பொன்னாகரம்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று மாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதையடுத்து தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதேநேரம் ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.

மேலும் காவிரி ஆற்றில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, இறங்கவோ கூடாது என்று ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் போலீசார் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com