"பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் உள்ளோம்"- முன்னாள் அமைச்சர் பொன்னையன்

பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் உள்ளதாக பழனிசாமி தரப்பைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறி உள்ளார்.
"பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் உள்ளோம்"- முன்னாள் அமைச்சர் பொன்னையன்
Published on

சென்னை

பழனிசாமி தரப்பைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வட மாநிலங்களில் பாஜக தங்கள் நட்பு கட்சிகளின் ஆட்சியை எப்படி வீழ்த்தியது என்பது எங்களுக்கு தெரியும்.பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் உள்ளோம். உள்ளாட்சி தேர்தலிலேயே பாஜகவுடனான கூட்டணி முடிந்து விட்டது. உள்ளாட்சி தேர்தலிலேயே பாஜக தனித்து தான் போட்டியிட்டது என கூறினார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com