நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பேச்சிப்பாறை-கோதையார் சாலையை சீரமைக்கக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

குலசேகரம், 

பேச்சிப்பாறை சீரோபாயிண்ட் முதல் கோதையாறுக்கு சொல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்கக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் பேச்சிப்பாறை சீரோ பாயிண்ட் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆப்பாட்டத்துக்கு பேச்சிப்பாறை ஊராட்சி நாம் தமிழர் கட்சி தலைவர் சுபாஷ் தலைமை தாங்கினார். குமரி மத்திய மாவட்ட செயலாளர் சீலன் முன்னிலை வகித்து ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினார். ஊராட்சி செயலாளர் சகில்குமார், கட்சி நிர்வாகிகள் கனகமணி, ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளவங்கோடு தொகுதி தலைவர் பிரின்ஸ் டேவிட், பத்மநாபபுரம் தொகுதி துணைத்தலைவர் ரெஞ்சித், பத்மநாபபுரம் தொகுதி மகளிர் பாசறை செயலாளர் ரேகா ராஜ் வினு, இணை செயலாளர் மரியசெல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com