'கூட்டணிக்கு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்' - பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக அண்ணாமலை தெரிவித்தார்.
'கூட்டணிக்கு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்' - பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை
Published on

புதுக்கோட்டை,

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரை பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்றைய தினம் புதுக்கோட்டையில் திருமயம் பகுதியில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். அவர்கள் பிரதமர் மோடியை ஏற்றுக்கொள்ள வேண்டும். நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக யார் வந்தாலும், கூட்டணிக்காக கதவுகள் திறந்தே இருக்கின்றன" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com