மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம் - விஜய் சூளுரை

அம்பேத்கர் உருவப்படத்திற்கு தவெக தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம் - விஜய் சூளுரை
Published on

சென்னை,

சட்டமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 136-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் சமத்துவம், சம உரிமை, சமூக நீதி, ஜனநாயகம் ஆகியவற்றை நிலைநிறுத்தியவர். வலுவான அடித்தளம் அமைத்து, எளியவர்களுக்கும் அதிகாரம் கிடைக்கப் பாடுபட்டவர். நம் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். நம் கொள்கைத் தலைவரின் பிறந்தநாளில், சமத்துவ சமுதாயம் அமைக்கும் லட்சியப் பாதையில் பயணிப்போம். மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com