சாதியில்லா சமூகம் அமைக்க உறுதியுடன் உழைப்போம்: உதயநிதி ஸ்டாலின்


சாதியில்லா சமூகம் அமைக்க உறுதியுடன் உழைப்போம்: உதயநிதி ஸ்டாலின்
x
தினத்தந்தி 29 April 2025 8:27 PM IST (Updated: 29 April 2025 8:27 PM IST)
t-max-icont-min-icon

'காலனி' எனும் சொல்லை திராவிட மாடல் அரசு. நீக்கவிருக்கிறது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

சென்னை ,

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

பெயர்களில் இருந்த சாதி ஒட்டினை ஒழித்த திராவிட இயக்கத்தின் வழியில், ஊர்களில் இருக்கும் 'காலனி' எனும் சாதிய அடக்குமுறைச் சொல்லை நீக்கவிருக்கிறது நம் திராவிட மாடல் அரசு.

முதல்-அமைச்சர் மு.க .ஸ்டாலினின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை மனதார வரவேற்கிறோம்.ஈராயிரம் ஆண்டுகள் இறுகிப்போய் இருக்கும் சாதியை வீழ்த்துவதற்கான பயணத்தில் முக்கிய மைல்கல் இது. சமத்துவம் தழைக்க - சாதியில்லா சமூகம் அமைக்க என்றும் உறுதியுடன் உழைப்போம். என தெரிவித்துள்ளார் .

1 More update

Next Story