

இட்டமொழி:
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நெல்லைக்கு வருகை தந்தார். அவரை கங்கைகொண்டானில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் நாங்குநேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது திரளான கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.