124 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

ஆம்பூர் அருகே 124 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
124 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
Published on

ஆம்பூரை அடுத்த மேல்சாணாங்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் சிறப்பு மனுநீதி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு 124 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாதனூர் ஒன்றியக் குழு துணைத்தலைவர் சாந்தி சீனிவாசன், வேளாண்மை இணை இயக்குனர் கண்ணகி மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com