தமிழகத்தில் கொரோனா குறையாத 11 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் என்னென்ன?

தமிழகத்தில் ஜூன் 14 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா குறையாத 11 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் என்னென்ன?
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் 14ஆம் தேதி காலை 6 மணி முதல் சில தளர்வுகள் உடன் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கோயமுத்தூர் ,நீலகிரி ,திருப்பூர் ,ஈரோடு ,சேலம் ,கரூர் ,நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர் ,நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய் தொற்று குறையாமல் அதிகமாகவே இருக்கிறது.

இதனால் இம்மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையிலும், அதேசமயம் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும் 11 மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் வருகின்ற 7ம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

*மளிகை பலசரக்குகள் காய்கறிகள் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

*காய்கறி பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் அனுமதி

*மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்படும் அனுமதி அளிக்கும் பொருட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகள் அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

*இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி

*சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒருநாளைக்கு 50% டோக்கன் மட்டும் வழங்கப்பட்டு பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதி

*தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com