கவர்னருக்கு அப்படி என்ன தமிழர்களின் மீது வெறுப்பு? - கனிமொழி கேள்வி

அவர் பொறுப்பு வகிப்பது கவர்னராகவா? இல்லை பாஜக தலைவராகவா? என தி.மு.க. எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார்.
கவர்னருக்கு அப்படி என்ன தமிழர்களின் மீது வெறுப்பு? - கனிமொழி கேள்வி
Published on

சென்னை,

தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிப்பதாவது,

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கும் மாநிலங்கள் உத்தரப்பிரதேசம், மராட்டியம், ராஜஸ்தான். மூன்றுமே பாஜக ஆளும் மாநிலங்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.

இருந்தாலும் பட்டியலில் பத்து இடங்களுக்குள் கூட வராத தமிழ்நாட்டின் மீது பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாநிலம் என்று பழி போடும் கவர்னருக்கு அப்படி என்ன தமிழர்களின் மீது வெறுப்பு? அவர் பொறுப்பு வகிப்பது கவர்னராகவா? இல்லை பாஜக தலைவராகவா?

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com