பா.ஜ.க. கரூரில் காட்டும் வேகத்தின் காரணம் என்ன? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


பா.ஜ.க. கரூரில் காட்டும் வேகத்தின் காரணம் என்ன? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 3 Oct 2025 11:35 AM IST (Updated: 3 Oct 2025 11:41 AM IST)
t-max-icont-min-icon

இது நிச்சயமாக அக்கறை இல்லை முழுக்க முழுக்க 2026 தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடும் அற்பச் செயல் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

மணிப்பூர் கலவரம், குஜராத் மோர்பி பால விபத்து, உத்தர பிரதேசத்தில் கும்பமேளா பலிகளுக்கெல்லாம் உடனடியாக விசாரணைக் குழுவை அனுப்பாத பா.ஜ.க., கரூரில் காட்டும் வேகத்தின் காரணம் என்ன?

நிச்சயமாக அக்கறை இல்லை! முழுக்க முழுக்க 2026 தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடும் அற்பச் செயல்!

அடுத்தவர் முதுகில் சவாரி செய்தே பழக்கப்பட்ட பா.ஜ.க., பிறர் இரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி பா.ஜ.க., கரூர் நெரிசலைப் பயன்படுத்தி யாரைத் தன் 'கண்ட்ரோல்'-இல் வைக்கலாம் என்று வலம் வருகிறார்கள்.

எந்த முகமூடி அணிந்து வந்தாலும், எத்தனை அடிமைகளைச் சேர்த்து வந்தாலும், புதிதாக யாரைச் சேர்க்க நினைத்தாலும், நான் முன்பே சொன்னதுபோது தமிழ்நாடு உங்களுக்கு (OUT OF CONTROL) அவுட் ஆப் கண்ட்ரோல்-தான்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story