

சென்னை,
தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள மறு தேர்வு எழுதும் பிளஸ்-டூ மாணவர்களுக்கான தேர்வு முடிவு எப்பேது வெளியாகும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மறுதேர்வு முடிந்த பின், அனைத்து பாடங்களுக்குமான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.
விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதி மற்றும் வழிமுறை குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.