

தென்காசி,
தென்காசி மாவட்டத்தையொட்டி உள்ள மேற்குதொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக குற்றாலம் உள்ளது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
மெயின் அருவியில் கடந்த ஆண்டு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப்பெருக்கின் காரணமாக சேதமடைந்து காணப்பட்டது. அதனை புதுப்பிக்கும் விதமாக சுற்றுலாத்துறை சார்பில் அருவி பகுதியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.