சட்டசபையில் இன்று எந்தெந்த துறைகள் மீது விவாதம்..?

சட்டசபையில் தவெக அரசின் முதல் பொதுபட்ஜெட் கடந்த 5-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது.
சட்டசபையில் இன்று எந்தெந்த துறைகள் மீது விவாதம்..?
Published on

சென்னை

சட்டசபையில் இன்று எந்தெந்த துறைகள் மீது விவாதம் நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பொது பட்ஜெட் கடந்த 5-ந்தேதியும், வேளாண்மை பட்ஜெட் 6-ந்தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 7, 10, 11 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண்மை அமைச்சர் வினோத் ஆகியோர் தங்களது பதிலுரையை கடந்த 12-ந்தேதி வழங்கினார்கள்.

இந்தநிலையில் சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு, 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு, அதன் பின்னர் சட்டசபை கடந்த 17-ந்தேதி மீண்டும் கூடியது. அது முதற்கொண்டு, பல்வேறு துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. பின்னர், இந்த துறைகளின் சார்பில் புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.

டிஜிட்டல் சேவைகள்

இந்நிலையில், சட்டசபையில் இன்று எந்தெந்த துறைகள் மீது விவாதம் நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, சட்டசபையில் இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசியவுடன் அவர்களது கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் டி.கே.பிரபு (இயற்கை வளங்கள்), கீர்த்தனா (தொழில்), குமார் (தகவல் தொழில்நுட்பம்) ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். மேலும் அவர்கள் துறையின் சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com