

சென்னை,
நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளநிலையில், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.81 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. முன்னதாக 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 39.61 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. (வித்தியாசம்: 16 சதவீதம் அதிகம்)
இந்த நிலையில், திருப்பூர் - 62.97 சதவீதம், நாமக்கல் - 62.51 சதவீதம், ஈரோடு - 61.79 சதவீதம், சேலம் - 61.42 சதவீதம், கரூர் - 60.77 சதவீதம் ஆகிய 5 இடங்களில் மதியம் 1 மணி நிலவரப்படி அதிக வாக்குபதிவுகள் பதிவாகி உள்ளன. ஆனால் மதியம் 1 மணியாகியும் ஒருசில இடங்களில் குறைவான வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. அதன் விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
குறைவான வாக்குகள் பதிவான மாவட்டங்கள்:-
கன்னியாகுமரி : 50.35 சதவீதம்
நீலகிரி : 50.42 சதவீதம்
நெல்லை: 50.73 சதவீதம்
ராமநாதபுரம்: 51.54 சதவீதம்
தூத்துக்குடி: 52.55 சதவீதம்