நண்பர்களுடன் குளித்தபோதுமுல்லைப்பெரியாற்றில் மூழ்கி மாணவர் பலி

நண்பர்களுடன் குளித்தபோது முல்லைப்பெரியாற்றில் மூழ்கி மாணவர் பலி
நண்பர்களுடன் குளித்தபோதுமுல்லைப்பெரியாற்றில் மூழ்கி மாணவர் பலி
Published on

முல்லைப்பெரியாற்றில் குளியல்

தேனி மாவட்டம் கம்பம் செக்கடி தெருவை சேர்ந்தவர் முகமது ராஜிக். இவர், சென்னையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மகன் சையது சுல்தான் இப்ராஹிம் (வயது 16). இவர், சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். பள்ளி விடுமுறை விடப்பட்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சையது சுல்தான் இப்ராஹிம் சொந்த ஊரான கம்பத்திற்கு வந்தார்.

நேற்று காலை இவர், தனது நண்பர்களுடன் கம்பம்-சுருளிப்பட்டி சாலையில் உள்ள முல்லைப்பெரியாற்றில் குளிக்க சென்றார். பின்னர் அனைவரும் ஆற்றில் இறங்கி ஆனந்தமாய் குளித்து கொண்டிருந்தனர். அப்போது சையது சுல்தான் இப்ராஹிம் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றார். இதில் ஆற்றில் மூழ்கிய அவர் நீரில் தத்தளித்தார்.

மாணவர் பலி

இதைக்கண்ட சக நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதையடுத்து அவர்கள் கம்பம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் ஆற்றில் இறங்கி சையது சுல்தான் இப்ராஹிமை மீட்டு கொண்டு வந்தனர். அப்பாது அவர் நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

இதற்கிடையே தகவல் அறிந்த கம்பம் தெற்கு போலீசாரும் அங்கு வந்தனர். அவர்கள் சையது சுல்தான் இப்ராஹிம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com