தவெக அலுவலகத்திற்கு வேட்பாளர்களை விஜய் வர சொல்லியது ஏன்? செங்கோட்டையன் பதில்

மக்கள் எதிர்பார்த்தப்படி விஜய் ஆட்சி அமைப்பார் என்று செங்கோட்டையன் கூறினார்.
தவெக அலுவலகத்திற்கு வேட்பாளர்களை விஜய் வர சொல்லியது ஏன்? செங்கோட்டையன் பதில்
Published on

செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- இந்த 2026 தேர்தல் வெற்றி என்பது சரித்திரத்தில் இடம்பெறக் கூடிய வரலாறாக அமையும். இந்தியாவே வியக்கும். தமிழக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான நாளாக அமையும். சர்வத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் கர்வத்தையும், சுயநலத்தையும் கட்டுப்படுத்தாத இடமும், அந்த சாம்ராஜ்யம் அழிவதை எவராலும் தடுக்க முடியாது.

தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 2026 தேர்தல் வெற்றி என்பது சரித்திரத்தில் இடம்பெறக் கூடிய வரலாறாக அமையும். இந்தியாவே வியக்கும்.

தமிழக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான நாளாக அமையும். சர்வத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் கர்வத்தையும், சுயநலத்தையும் கட்டுப்படுத்தாத இடமும், அந்த சாம்ராஜ்யம் அழிவதை எவராலும் தடுக்க முடியாது. கருத்துக்கணிப்புகளை விட மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். உங்கள் வீட்டில் யாருக்கு ஓட்டு போட்டார்கள் என்று உங்களுக்கும் தெரியும்.

குழந்தைகள் முதல் முதன்முறை வாக்காளர்கள் வரை அனைவரும் ஆட்சி மாற்றம் வேண்டும் என நினைக்கின்றனர். இதனால் மக்கள் எதிர்பார்த்தப்படி விஜய் ஆட்சி அமைப்பார் இந்த தேர்தலுக்குப் பிறகு பாஜக இருக்குமா, இருக்காதா என தெரியவரும்; வெற்றி பெற்றபின் தவெக அலுவலகத்திற்கு வேட்பாளர்களை விஜய் வர சொல்லியது வழக்கமானது” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com