யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன்? - நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்

உத்தர பிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன்? - நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்
Published on

சென்னை,

உத்தர பிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வயது குறைவானவராக இருந்தாலும் யோகி, சன்னியாசி காலில் விழுந்து வணங்குவது எனது பழக்கம். நட்பு ரீதியாக மட்டுமே உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரை சந்தித்து பேசினேன். 4 ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலை சென்று வந்தது மகிழ்ச்சியாக இருந்தது.

ஜெயிலர் படத்தை வெற்றி படமாக்கிய தமிழக மக்களுக்கு எனது நன்றி. வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோருக்கு நன்றி" என்று கூறினார்.

மேலும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அரசியல் வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com