திருப்பதி கோவில் போல் தமிழக கோவில்களில் தங்கும் விடுதிகளை ஏன் பராமரிப்பதில்லை? உயர்நீதிமன்ற மதுரை கிளை

திருப்பதி கோவில் போல் தமிழக கோவில்களில் தங்கும் விடுதிகளை ஏன் பராமரிப்பதில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
திருப்பதி கோவில் போல் தமிழக கோவில்களில் தங்கும் விடுதிகளை ஏன் பராமரிப்பதில்லை? உயர்நீதிமன்ற மதுரை கிளை
Published on

மதுரை,

ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் உள்ள தங்கும் விடுதிகள் பக்தர்களின் வசதிக்கேற்ப பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், உயர் நீதிமன்ற கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இதன்மீது இன்று நடந்த விசாரணையில், திருப்பதி கோவிலில் உள்ள தங்கும் விடுதிகளில் இருக்கும் வசதிகள் தமிழகத்தில் உள்ள பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட கோவில்களில் ஏன் இல்லை என்று இந்து அறநிலைய துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

திருப்பதி கோவில் தங்கும் விடுதிகளை பராமரிப்பது போல் தமிழகத்தில் உள்ள கோவில்களை ஏன் பராமரிப்பதில்லை என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com