குழம்பு ருசியாக இல்லை என்று கணவர் தகராறு செய்ததால் மனைவி தற்கொலை

ஆழ்வார்குறிச்சி அருகே குழம்பு ருசியாக இல்லை என்று கணவர் தகராறு செய்ததால் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
குழம்பு ருசியாக இல்லை என்று கணவர் தகராறு செய்ததால் மனைவி தற்கொலை
Published on

கடையம்:

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செங்கானூர் பகுதியைச் சர்ந்தவர் விஜயபாண்டியன். மைக் செட் தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி (வயது 29). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் சாப்பிடுவதற்காக விஜயபாண்டியன் வீட்டிற்கு வந்தார். ஆனால் குழம்பு ருசியாக இல்லையென்று கூறி மகேஸ்வரியிடம், விஜயபாண்டியன் தகராறு செய்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

இதனால் மனவேதனை அடைந்த மகேஸ்வரி வீட்டில் பேன் தொல்லைக்கு பயன்படுத்தும் மருந்தை குடித்து மயங்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com