தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா ..? நாளை மறுநாள் ஆலோசனை கூட்டம் ..!

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா ..? நாளை மறுநாள் ஆலோசனை கூட்டம் ..!
Published on

சென்னை

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது .வேகமாக பரவி வரும் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு ,இரவு நேர ஊரடங்கு ,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது

.

எனினும் தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது .

இந்நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து நாளை மறுநாள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

. கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com