கூடுவாஞ்சேரி அருகே துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு

கூடுவாஞ்சேரி அருகே துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
கூடுவாஞ்சேரி அருகே துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு
Published on

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த ஒத்திவாக்கத்தில் உள்ள மாநில கமாண்டோ துப்பாக்கி சுடும் தளத்தில் தமிழக போலீசாருக்கான மாநில அளவில் துப்பாக்கி சுடும் போட்டிகள் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. இதில் ரைபிள் பிரிவு, பிஸ்டல், ரிவால்வர் பிரிவு, மற்றும் கார்பைன் பிரிவு ஆகிய துப்பாக்கி சுடும் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து கூறி பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினார். மேலும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் முதலிடத்தை தமிழ்நாடு ஆயுதப்படை அணியும், 2-வது இடத்தை மத்திய மண்டல அணியும், 3-வது இடத்தை தலைமையிட அணியும் பெற்றது. இந்த அணிகளுக்கு சுழற்கோப்பை, பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் பண வெகுமதி வழங்கி பாராட்டினார். இதில் ஏ.டி.ஜி.பி. ஜெயராம், தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com