இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்பு எச்.வசந்தகுமார் ராஜினாமா கடிதம் அளிக்கிறார்
தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 13 இடங்களில் தி.மு.க.வும், 9 இடங்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றன.
Published on:
Copied
Follow Us
சென்னை,
வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று சபாநாயகர் ப.தனபால் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்தநிலையில், வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 9 பேரும் இன்று(புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் சபாநாயகர் முன்னிலையில் பதவி ஏற்க உள்ளனர்.