"தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன்" - அரிசி, பால் பவுடர் என இலங்கை மக்களுக்காக தயாராகும் பொருட்கள்..!

இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படவுள்ள பொருட்கள் தற்போது பேக்கிங் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன்" - அரிசி, பால் பவுடர் என இலங்கை மக்களுக்காக தயாராகும் பொருட்கள்..!
Published on

சென்னை,

இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படவுள்ள அத்தியாவசியப் பொருட்கள் தற்போது பேக்கிங் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன்" "மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதல் அமைச்சர்" என்று அச்சிடப்பட்ட பைகளில் இந்திய அரசு முத்திரையுடன் பொருட்கள் பேக்கிங் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

மே 22-ந்தேதிக்குப் பிறகு சென்னை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு பொருட்கள் அனுப்பப்படும் என்றும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து பொருட்களை அனுப்பி வைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 123 கோடி மதிப்பிலான 40 ஆயிரம் டன் அரிசி ரூ. 15 கோடி மதிப்பிலான பால் பவுடர் மற்றும் மருந்துப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com