குடும்பத்தகராறில் பெண் அடித்துக்கொலை

ஒரத்தநாடு அருகே குடும்பத்தகராறில் பெண்ணை அடித்துக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
குடும்பத்தகராறில் பெண் அடித்துக்கொலை
Published on

ஒரத்தநாடு;

ஒரத்தநாடு அருகே குடும்பத்தகராறில் பெண்ணை அடித்துக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

பெண் அடித்துக்கொலை

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள பின்னையூர் மேலத்தெருவை சேர்ந்தவர் பழனிவேல்(வயது 42). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அமிர்தவள்ளி(42). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.பழனிவேலுக்கும் அவரது மனைவி அமிர்தவள்ளிக்கும் அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மதியம் கணவன்-மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பழனிவேல் மண்வெட்டி கட்டையால் அமிர்தவள்ளியை சரமாரியாக தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அமிர்தவள்ளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கணவர் கைது

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு போலீசார், வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த அமிர்தவள்ளி உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து பழனிவேலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.குடும்பத்தகராறில் மனைவியை கணவர் அடித்துக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com