விஷம் குடித்து பெண் தற்கொலை

கீழ்பென்னாத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து பெண் தற்கொலை
Published on

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் அருகே குமரகுடிபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி நித்யா (வயது 30). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது.

இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

நித்யா உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் நித்யா காணப்பட்டார்.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று  நித்யா அரளி விதையை (விஷம்) பறித்து வந்து அரைத்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது.

உடனடியாக அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்

இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com