பெண் விஷம் குடித்து தற்கொலை

செண்பகராமன்புதூர் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெண் விஷம் குடித்து தற்கொலை
Published on

ஆரல்வாய்மொழி:

செண்பகராமன்புதூர் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

செண்பகராமன்புதூர் அருகே உள்ள சமத்துவபுரம் பி.சி.காலனியை சேர்ந்தவர் தாணுதாஸ். இவருடைய மனைவி முருகம்மாள் (வயது46). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று முருகம்மாளுக்கும், அவரது மாமியாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த முருகம்மாள் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகம்மாள் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com