பெண் விஷம் குடித்து தற்கொலை

குடும்ப தகராறு காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெண் விஷம் குடித்து தற்கொலை
Published on

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன்கோட்டாம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி கமலம் (வயது 25). இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஆற்றிற்கு துணி துவைக்க சென்றபோது கமலம் சாணிபவுடரை (விஷம்) கரைத்து குடித்ததாக தெரிகிறது.

இதையடுத்து அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில், மனவேதனை அடைந்து கமலம் தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com