விஷம் குடித்து பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை
விஷம் குடித்து பெண் தற்கொலை
Published on

கொல்லங்கோடு:

நித்திரவிளை அருகே எஸ்.டி.மங்காடு கரிக்கரை பகுதியை சேர்ந்தவர் பென்சிகர் ராஜ் (வயது 50). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ராஜகுமாரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.இந்த 2 மகன்களின் படிப்பு செலவுக்காக வீட்டு பத்திரத்தை அடகு வைத்து பென்சிகர் ராஜ் அதிகமாக கடன் வாங்கியுள்ளார். இந்த கடனை அவரால் அடைக்க முடியவில்லை. இதனால் ராஜகுமாரி மிகுந்த வருத்தத்தில் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று வீட்டில் தனிமையில் இருந்த ராஜகுமாரி வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அப்போது வீட்டுக்கு வந்த இளைய மகன் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக பாறசாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com