உறவினர்கள் பணத்தை திரும்ப தர மறுத்ததால் பெண் தூக்கிட்டு தற்கொலை...!

உறவினர்கள் பணத்தை திரும்பி தர மறுத்ததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உறவினர்கள் பணத்தை திரும்ப தர மறுத்ததால் பெண் தூக்கிட்டு தற்கொலை...!
Published on

வேலூர்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள புதுப்பேட்டையை சேர்ந்தவர் பிரபு. சொந்தமாக லாரிகள் வைத்து தொழில் நடத்திவருகிறார். இவரது மனைவி ஸ்ரீலட்சுமி (வயது 37). இவர்களுக்கு ரூபேஷ்(12), தன்ஷிகா என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

பிரபு அவரது மனைவி ஸ்ரீ லட்சுமியும் தங்களுக்கு தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்துள்ளனர். பல லட்சம் ரூபாய் வட்டிக்கு பணம் கொடுத்த நிலையில் அதற்கான வட்டியை அவர்கள் திருப்பித் தராமல் இருந்து உள்ளனர்.

இதனால் அவர்களிடம் ஸ்ரீலட்சுமி பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் பலமுறை கேட்டும் அவர்கள் பணத்தை திருப்பித்தரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீலட்சுமி பணத்தை கேட்டு அவர்களிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

இதனால் கோபம் அடைந்த உறவினர்கள் சிலர், ஸ்ரீ லட்சுமியை தகாத வார்த்தையால் திட்டி உள்ளனர். இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலை அடைந்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஸ்ரீ லட்சுமி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த குடியாத்தம் டவுன் போலீசார், ஸ்ரீ லட்சுமி உடலை கைப்பற்றி பிரே பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர்.

உறவினர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com