பெண் தீக்குளித்து தற்கொலை

சென்னை புதுப்பேட்டையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெண் தீக்குளித்து தற்கொலை
Published on

சென்னை புதுப்பேட்டை ஆச்சாரி தெருவைச் சேர்ந்தவர் தேவராஜ். கார் டிரைவரான இவர், தன்னுடைய மனைவி கலாதேவி (வயது 45) மற்றும் 2 மகன்களுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக கலாதேவி உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கலாதேவி திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த வந்த அக்கம் பக்கத்தினர், அவரது உடலில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கலாதேவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com