பெண் தீக்குளித்து தற்கொலை

ஆரல்வாய்மொழியில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து காண்டார்.
பெண் தீக்குளித்து தற்கொலை
Published on

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழியில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து காண்டார்.

தனியாக வசித்து வந்தார்

ஆரல்வாய்மொழி வடக்கூர் இந்திராநகரை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி லட்சுமி (வயது 46). மகேஷ் 15 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இவர்களது மகள் திருமணமாகி வடசேரியில் வசித்து வருகிறார். இதனால், லெட்சுமி மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

கடந்த வாரம் வீட்டு முன்பு தவறி விழுந்து காலில் முறிவு ஏற்பட்டு உள்ளது. இதற்கு சிகிச்சை பெற்று வந்தார். இதனால், மனமுடைந்த அவர் நேற்று வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு உள்ளே மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

போலீசார் விசாரணை

வீட்டில் இருந்து புகை வந்ததை பார்த்த அக்கம் பக்ககத்தினர் ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே சப் -இன்ஸ்பெக்டர் ஸ்டீபன், ஜாண் கென்னடி ஆகியோர் விரைந்து வந்து கதவை பொதுமக்கள் உதவியுடன் உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, லட்சுமி உடல் முழுவதும் தீயில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரது அருகில் தீ எரிந்து கொண்டிருந்தது. அந்த அறையில் கியாஸ் சிலிண்டரும் இருந்தது. இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரந்து வந்து தீயை முழுமையாக அணைத்தனர். கியாஸ் சிலிண்டர் வெடிக்கும் முன்பு தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தொடர்ந்து லட்சுமியின் உடலை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com