வேப்பனப்பள்ளி அருகேகிணற்றில் இளம்பெண் உடல் மீட்புபோலீசார் விசாரணை

வேப்பனப்பள்ளி அருகேகிணற்றில் இளம்பெண் உடல் மீட்புபோலீசார் விசாரணை
Published on

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி அருகே கிணற்றில் இளம்பெண் உடல் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம்பெண்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள சின்னபத்தளப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மகள் சத்யா (வயது 18). இவர் நேரலகிரியில் உள்ள தையல் கடையில் பயிற்சி பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த சத்யா கடைக்கு செல்வதாக கூறி விட்டு வெளியில் சென்றவர் பின்னர் வீடு திரும்பி வரவில்லை. இதையடுத்து உறவினர்கள் சத்யாவை காணவில்லை என தேடி பார்த்தபோது அவருடைய உடல் அருகே உள்ள கிணற்றில் மிதப்பது தெரியவந்தது.

விசாரணை

இதையடுத்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து வேப்பனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யா கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com