பாம்பு கடித்து பெண் சாவு

விவசாய நிலத்துக்கு காவலுக்காக சென்ற பெண் பாம்பு கடித்து இறந்தார்.
பாம்பு கடித்து பெண் சாவு
Published on

பேரணாம்பட்டை அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், கட்டிட சென்டரிங் தொழிலாளி. இவரின் மனைவி ஜானகி (வயது 31). இவர் பேரணாம்பட்டு அருகே செர்லப்பல்லி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். இரவு தாய்க்கு சொந்தமான விவசாய நிலத்தில் காவலுக்காக சென்றுள்ளார்.

அப்போது ஜானகியை கண்ணாடி விரியன் விஷ பாம்பு கடித்தது. அவர், பாம்பை பார்த்ததும் அதிர்ச்சியில் கதறினார். சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையிலும், பின்னர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ஜானகி இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஷ பாம்பு கடித்து உயிரிழந்த ஜானகிக்கு 3 மகள்கள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com