மின்சாரம் தாக்கி பெண் பலி

மானூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
மின்சாரம் தாக்கி பெண் பலி
Published on

மானூர்:

மானூர் அருகே உள்ள கீழ பிள்ளையார்குளம் குறிச்சி நகரை சேர்ந்தவர் கருப்பசாமி. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பூமாரி (வயது 32). இவர்களுக்கு இசக்கிப்பாண்டி (11) என்ற மகனும், பிரியகர்ஷினி (8) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை கருப்பசாமி வேலைக்கு சென்றுவிட்டார். பூமாரி தன் வீட்டில் உள்ள மின்மோட்டாரை போட்டுவிட்டு, தண்ணீர் பிடிப்பதற்காக குழாயை தொட்டார். அப்போது மின்சாரம் தாக்கி மயக்கம் அடைந்தார்.

தகவல் அறிந்த கருப்பசாமி விரைந்து வந்து பூமாரியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர், பூமாரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com