மின்சாரம் தாக்கி பெண் பலி

களம்பூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
மின்சாரம் தாக்கி பெண் பலி
Published on

ஆரணி

களம்பூரை அடுத்த கஸ்தம்பாடி அருகில் உள்ள தமிழர் மறுவாழ்வு மையத்தை சேர்ந்தவர் சிவகுமார், இவர் கோவையில் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சற்குண தேவி (வயது 39). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

வீட்டின் வெளியே மின்சார கம்பி சென்று கொண்டிருந்தது. தற்போது பெய்து வந்த கனமழையினால் மின்சார கம்பி அருகில் உள்ள கம்பியின் மீது பட்டுள்ளது.

இதனை கவனிக்காத சற்குணதேவி கம்பியில் துணி காய வைக்க சென்றார்.

அப்போது அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்து வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com