கணவன் மற்றும் 2 குழந்தைகளை இழந்த பெண் தூக்கிட்டு தற்கொலை...!

கணவன் மற்று இரண்டு குழந்தைகள் உயிரிழந்த நிலையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
கணவன் மற்றும் 2 குழந்தைகளை இழந்த பெண் தூக்கிட்டு தற்கொலை...!
Published on

ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த லோகேஸ்வரன் மனைவி மீனாட்சி(வயது27). இந்த தம்பதிகளுக்கு ஜஸ்வந்த் (8) ஹரிபிரீத்தா(6) என்று இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு குளத்தில் தவறி விழுந்த இண்டு குழந்தைகளும் உயிரிழந்தனர். இதனால் கணவன் மனைவி இருவம் மிகுந்த மன வேதனையில் இருந்தனர்.

இந்த வலியை தாங்க முடியதா கணவன் லோகேஸ்வரன் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். பின்னர் மனைவி மீனாட்சி மட்டும் வாழ்க்கையை வெறுத்து வாழ்ந்து வந்துள்ளார்.

தனது குடும்பத்தையே இழந்த மீனாட்சி கடம்பூரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மீனாட்சி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அறிந்த உமராபாத் போலீசார் மீனாட்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செயது போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கணவன் மற்றும் குழந்தைகளை இழந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்திள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com