பெண் மாயம்

பெண் மாயமானார்.
பெண் மாயம்
Published on

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தமயந்தி. இவரது மகள் சித்ரா(வயது 41). மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை வீட்டில் இருந்த சித்ராவை திடீரென காணவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து தமயந்தி தா.பழூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து மாயமான சித்ராவை தேடி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com