கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை
Published on

சென்னை புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் அசோகன் (வயது 62). இவருடைய மனைவி நாகேஸ்வரி (57). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் விரக்தி அடைந்த நாகேஸ்வரி, வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com