திருவட்டார் அருகே குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை

திருவட்டார் அருகே குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவட்டார் அருகே குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை
Published on

திருவட்டார், 

திருவட்டார் அருகே குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடன் வாங்கி கொடுத்தார்

திருவட்டார் அருகே உள்ள செங்கோடி நெடுமானூர் விளையை சேர்ந்தவர் ஐசக் ராஜ்குமார் (வயது47). தனியார் ஆம்னி பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஜினி மலர் (37). இவர்களுக்கு 11, 15 வயதில் 2 மகன்கள் உண்டு. ஜினிமலர் சுய உதவிக்குழுவில் சர்ந்துள்ளார். இவர் பலருக்கு ஜாமீன் கையெழுத்து போட்டு கடன் எடுத்து கொடுத்துள்ளார்.

இதை அறிந்த ஐசக் ராஜ்குமார் மனைவியை கண்டித்து வந்தார். இந்தநிலையில் நற்று முன்தினம் காலையில் ஐசக்ராஜ்குமார் வீட்டுக்கு வந்த பாது வீட்டில் ஜினி மலர் இல்லை. சிறிது நேரம் கடந்து அவர் வீட்டுக்கு வந்தார். அவரிடம் கணவர் 'எங்கே சென்றுவிட்டு வருகிறாய்' என கேட்டார். அதற்கு ஜினி மலர் குழு பணம் கேட்க சென்றதாக கூறினார். இதையடுத்து அவர்கள் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

தீக்குளித்தார்

இதனால் மனமுடைந்த ஜினிமலர் சமையல் அறைக்கு சென்று அங்கு இருந்து மண்எண்ணெய்யை தன் மீது ஊற்றி தீக்குளித்தார். உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் அலறினார். அவரது சத்தம் கேட்டு ஐசக் ராஜ்குமார் விரைந்து வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். தொடர்ந்து படுகாயத்துடன் கிடந்த ஜினி மலரை மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் ஜினி மலர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com