பெண் கழுத்தை நெரித்து கொலை

கந்திலி அருகே வீட்டிற்கு வெளியே தூங்கிய பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் கழுத்தை நெரித்து கொலை
Published on

கந்திலி அருகே வீட்டிற்கு வெளியே தூங்கிய பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டுக்கு வெளியே தூங்கினார்

திருப்பத்துர் மாவட்டம், கந்திலி அருகே உள்ள செவ்வாத்தூர் புதூர் காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ராமரோஜா (வயது 58). இவர்களுக்கு புனிதா என்ற மகளும், ஏழுமலை என்ற மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. ஏழுமலை சென்னையில் கார் டிரைவராக உள்ளார்.

இதனால், செல்வராஜ் மற்றும் அவரது மனைவி ராமரோஜா மருமகள் அம்சா மற்றும் 10 மாத பேத்தியுடன் செவ்வாத்தூர் புதூர் காலனியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். செல்வராஜ் திருப்பத்தூரில் உள்ள கடை ஒன்றில் இரவு பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இதனால் செல்வராஜ் இரவில் வேலைக்காக திருப்பத்துர் சென்றுவிட்டார்.

கழுத்து நெரித்து கொலை

அப்போது இரவு சுமார் 10 மணியளவில், ராமரோஜா தனது மருமகளை வீட்டுக்குள் வைத்துகதவை வெளிப்பக்கமாக தாளிட்டு வழக்கம்போல் வீட்டிற்கு வெளியே உள்ள திண்ணையில் தூங்க சென்றுள்ளார். நேற்று காலை வெகு நேரமாகியும், வீடு திறக்காததால் வீட்டுக்குள் இருந்த அம்சா அக்கம் பக்கத்தினரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அழைத்தார்.

அவர்கள் அங்கு வந்து பார்த்தபோது, ராமரோஜா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை கொலை செய்தவர்கள் யார்?, எதற்காக கொலை செய்தார்கள் என்பது தெரியவில்லை.

இதுகுறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில், கந்திலி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com