பஸ்சில் பெண்கள் ஓசி-யில் பயணம் செய்யவில்லை, அது எங்களின் வரி பணம் - பொன்முடிக்கு சீமான் கண்டனம்

பெண்கள் பஸ்சில் ஓசியில் பயணம் செய்வதாக அமைச்சர் பொன்முடி பேசியதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பஸ்சில் பெண்கள் ஓசி-யில் பயணம் செய்யவில்லை, அது எங்களின் வரி பணம் - பொன்முடிக்கு சீமான் கண்டனம்
Published on

சென்னை,

தனியார் மயத்தை எதிர்த்து தபால்த்துறை ஊழியர்கள் நடத்திய போராட்டத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

இரண்டரை கோடி லட்சம் கோடி கடன் வைத்திருக்கிறார் அதானி. அவரைப்போய் உலகப்பணக்காரர் என்கிறார்கள். இது ஒரு கொடுமை. சொந்த நாட்டு மக்களை பிச்சைக்காரர்களாக வைத்திருப்பது தான் இந்த நாடு ஏற்றுக்கொண்ட பொருளாதாரக்கொள்கை. இது தான் இவர்களின் ஆட்சிமுறை.

அரசு பஸ்சே எங்களின் வரி பணத்தில் தான் வாங்கியுள்ளீர்கள்.உங்கள் பணத்தில் வாங்கவில்லை. பஸ்சில் பெண்கள் ஓசி-யில் பயணம் செய்யவில்லை என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com