மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி பொருட்கள் விற்பனை சந்தை

ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த உற்பத்தி பொருட்களின் விற்பனை சந்தை நடைபெற்றது.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி பொருட்கள் விற்பனை சந்தை
Published on

ஆரணி

ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த உற்பத்தி பொருட்களின் விற்பனை சந்தை நடைபெற்றது.

ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் உற்பத்தி பொருட்கள் வாங்குவோர், விற்போர் சந்தை நடைபெற்றது. இதில் ஆரணி மற்றும் மேற்கு ஆரணி ஒன்றியங்களை சேர்ந்த மகளிர் குழுக்கள் கலந்து கொண்டு அவர்கள் தயாரித்த சமையல் எண்ணெய், கடலைமிட்டாய், தின்பண்டங்கள் மற்றும் அவர்கள் விளைவித்த விளைபொருட்களான வேர்க்கடலை, மாதுளை, வாழை பழங்கள், சிறுதானியங்கள் உள்பட பல்வேறு வகையான பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தனர்.

இவற்றை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட மேலாண்மை அழகு மகளிர் திட்டத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (மகளிர்) தென்னரசு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திட்ட இயக்குனர் சையத் சுலைமான், உதவி திட்ட அலுவலர் ஜான்சன் ஆகியோர் கலந்து கொண்டு மகளிர் உற்பத்தி பொருட்களை பார்வையிட்டனர். ஏராளமானோர் மகளிர் குழுவினர் உற்பத்தி செய்த பொருட்களை வாங்கிச்சென்றனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட வள பயிற்சியாளர் சண்முகவேல் உள்பட மகளிர் குழுக்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முடிவில் வட்டார இயக்க மேலாளர் அருள்மொழி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com