பூச்சி கடித்து மர வியாபாரி சாவு

பூச்சி கடித்து மர வியாபாரி உயிரிழந்தார்.
பூச்சி கடித்து மர வியாபாரி சாவு
Published on

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, மருவத்தூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52). மர வியாபாரி. இவர் கவுல்பாளையம்-அருமடல் செல்லும் சாலையில் வாங்கி போட்டிருந்த மரங்களை நேற்று காலை சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது ராஜேந்திரனை ஏதோ பூச்சி கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை சிகிச்சைக்காக, அவருடைய மகன் சரண்ராஜ் (25) மோட்டார் சைக்கிளில் மருவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துமனையில் ராஜேந்திரன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராஜேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com