மனைவியிடம் செல்போனில் கூறிவிட்டு தொழிலாளி தற்கொலை

கொங்கணாபுரம் அருகே மனைவிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து விட்டு, விசைத்தறி தொழிலாளி தூக்குப்பாட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மனைவியிடம் செல்போனில் கூறிவிட்டு தொழிலாளி தற்கொலை
Published on

கொங்கணாபுரம் அருகே மனைவிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து விட்டு, விசைத்தறி தொழிலாளி தூக்குப்பாட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொழிலாளி

கொங்கணாபுரம் ஒன்றியம் வெள்ளாளபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 30), விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி சங்கீதா. இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பிரபு தனது தாயார் குப்பாயி மற்றும் மனைவி குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

பிரபுவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களாக பிரபு வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து மது அருந்தி வந்ததால் அவருடன் கோபித்துக் கொண்டு சங்கீதா, வானுசாம்பட்டியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

தற்கொலை

இந்தநிலையில் நேற்று காலை தனது மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட பிரபு, நான் இன்னும் சிறிது நேரத்தில் தற்கொலை செய்யப்போவதாக கூறிவிட்டு தொடர்பை தூண்டித்துள்ளார்.

இதுகுறித்து சங்கீதா தனது உறவினர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். மேலும் அவரும் உறவினர்களும் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது பிரபு தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பிரபுவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

===

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com