தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Published on

தக்கலை:

தக்கலை அருகே உள்ள மருதூர்குறிச்சியை சேர்ந்தவர் ஜான்சன் (வயது66), கூலி தொழிலாளி. இவரது மனைவியும், குழந்தைகளும் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றனர். அதன்பின்பு ஜான்சன் தனியாக வசித்து வந்தார். இதனால் மிகுந்த வருத்தம் அடைந்த இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் ஜான்சன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com