கருங்கல் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கருங்கல் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கருங்கல் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Published on

கருங்கல்:

கருங்கல் அருகே பிலாக்காவிளை பரமன்கோணம் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 53), தொழிலாளி. இவருடைய மனைவி கலைச்செல்வி. ஜெயக்குமார் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த அவர் நேற்றுமுன்தினம் இரவு விஷத்தை குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.

ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் ஜெயக்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com